டில்லி

ன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

பல்வேறு முக்கிய  விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில்  விவாதிக்கப்படவுள்ளது.

மாநில நிதி அமைச்சர்களைக் கொண்ட குழு ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பெரும்பான்மையாகப் பரிந்துரை வழங்கியது. இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் திரையரங்கங்களில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான இறக்குமதி , மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்களிப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.