டலுர்

த்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இருந்து சிலர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு புனித பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.  அவர்கள் கீழே இறங்கி வரும் போது, வழியில் கற்கள் விழுந்ததால்  அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில் தமிழர்களை மீட்க உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இது குறித்து,

“தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வானிலை நன்றாக இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு இன்றே தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்”

என்று தெரிவித்துள்ளார்.