புதுடெல்லி:
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை, தமிழகம் பராமரித்து வருகிறது. கடந்த, 1895ல் கட்டப்பட்ட இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்த வழக்குகளை, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ். ஓகா, சி.டி. ரவிகுமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று இந்த அமர்வு கூறியுள்ளது.
Patrikai.com official YouTube Channel