டில்லி:
அயோத்தி ராமர் கோயிலில் மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்படும் போது அங்கு மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலை வைக்க வலியுறுத்துவேன்.
ராமர் கோவில் விவகாரத்தில் அவருடைய பங்கை நினைவூட்டும் வகையில் அது அமைக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel