யநாடு

யநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுகையில், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டுள்ளது. மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர்.  நேற்று முன் தினம் வயநாடு பகுதியில் இரவில் கனமழை பெய்ததால், பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று அதிகாலை 2 மணியளவிலும் பின்னர், 4.30 மணியளவிலும் என அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மக்களில் பலர் வெள்ள நீரால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சிலரின் உடல்கள் மண்ணில் புதைந்து கிடந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 98 பேரை காணவில்லை. 128 பேர் சிகிச்சையில் உள்ளனர். 481 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 3,069 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்400 குடும்பங்கள் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி இன்றும் தொடர்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண நிதிக்கு கேரள வங்கி முன்பே ரூ.50 லட்சம் தொகையை வழங்கியிருக்கிறது. தவிர கொச்சின் சர்வதேச விமான நிலையம் ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  ரூ.5 கோடி நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் அதிகாரப்பூர்வ முறையில் 2 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்து, பொது நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்ப ட்டுள்ளத்.. தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட உள்ளது.\ கனமழை எதிரொலியாக 11 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது வயநாடு, இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், திருச்சூர், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா  மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆயினும், பொது தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும் அதில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.