மும்பை
சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் நிருபம் நாக்பூர் வன்முரையில் வங்கதேசத்துக்கு தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என மாநிலத்தில் வலதுசாரி அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். வலதுசாாி அமைப்பினர் கடந்த 17-ந் தேதி அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்லாமியர்களின் புனித நூல் வாசகங்கள் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
இதையொட்டி ஏற்பட்ட வன்முறையில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு கடை, வீடுகள் சூறையாடப்பட்டது. இதில் 33 போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்ததால் வன்முைற குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம்,
”நாக்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்களை வங்கதேசத்தில் கண்டுபிடிக்க முடியும். வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் நாசவேலைகளுக்கு சமூகவலைதளத்தை பயன்படுத்த நிதி திரட்டி உள்ளார்.
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் நிலைப்பாடுகள், அந்த கட்சி இந்துவிரோத கட்சியாக மாறிவிட்டதை காட்டுகிறது. மாதோஸ்ரீயில் (உத்தவ் தாக்கரே வீடு) விரைவில் பால்தாக்கரே படத்துக்கு அருகில் அவுரங்கசீப் படம் போடப்படும்.”
எனக் கூறி உள்ளார்.