கர்நாடக மாநிலத்தின் தொழில் அதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா மனைவி மாதவி கடந்த 2017-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.

அவர் நினைவாக இருந்த ஸ்ரீனிவாஸ் குப்தா, மனைவி மாதவிக்காக கனவு இல்லத்தை கட்ட தொடங்கினார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சர்யம் பட்டனர். ஏனென்றால், ஸ்ரீனிவாஸ் குப்தா தனது மனைவி நினைவாக கட்டிய மாதவி கனவு இல்லத்திற்குள் சிலிகான் மெழுகுவினால் ஆன தனது மனைவி சிலையை அமைத்திருந்தார். அந்த சிலையை பார்த்தவர்கள் மாதவி உயிருடன் இருப்பது போல் இருக்கின்றது என்றனர்.

தன் மனைவியை மெழுகுச் சிலையாக செய்து அவர் தலைமையில்தான் நடக்க வேண்டும் என தத்ரூபமாக வடித்து விழா நடத்தி உள்ளார்.