டெல்லி

ரும் 27 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சுமார் ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஜாமீன் கிடைக்காத நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பலமுறை ஒத்திவைத்துள்ளதாகவும், விரைந்து ஜாமீன் வழங்குமாறும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மேலும் கால அவகாசம் கோரியதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற்ம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிபதிகள் சிறப்பு அமர்வில் உள்ள வழக்குகளை விசாரிக்க செல்வதால், செந்தில் பாலாஜியின் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.