பெங்களூரு:
பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பெங்களூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப்டடுள்ளது.
பெங்களூரு – மைசூர் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனிடையே வானிலை காரணமாக பெங்களூர் வந்த சில விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையால் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel