சித்திரதுர்கா

ன்னட நடிகர் தர்ஷனால் கொல்லப்பட்ட ரேனுகாசாமியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி தர்ஷனுடைய தோழியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். எனவே அவரை நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார்.

இந்த கொலை வ்ழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேணுகாசாமி படுகொலை செய்யப்பட்டபோது, அவருடைய மனைவி சஹானா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று மாலை அவருக்கு கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

ரேணுகாசாமியின் தந்தை காசிநாத் சிவானகவுடர்,

“நான் இப்போது முழு மகிழ்ச்சியை உணர்ந்தேன் ர். என்னுடைய மகன் குழந்தை வடிவத்தில் திரும்ப வந்து விட்டான். சஹானாவுக்கு மாலை 6.55 மணியளவில் குழந்தை பிறந்தது. இலவச சிகிச்சை அளித்ததற்காக மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி. தாயும் சேயும்” உடல்நலத்துடன் உள்ளனர்”

என்று கூறியுள்ளார்.