க்னோ

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது., வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கடசியாக ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தல் நடைபெற்று வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் 2004ம் ஆண்டு முதல் 2019 வரை எம்.பி. தேர்தலில் ராகுல்காந்தி வெற்றிபெற்று வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்து அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார்.

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுவரை இந்த இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.

எனவே அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவாரா? ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவாரா? என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.  தற்போது அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். அமேதி தொகுதியில் கிஷோர் லால் சர்மா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராகுல்காந்தி ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் 2வது தொகுதியாக ரேபரேலியிலும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.