டெல்லி

ங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காதவர்களிடம் ரு.8500 கொடி அபராதம் வசூலித்தற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்/

மக்களவையில் 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ.2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட  இது 25% அதிகமாகும்.

இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி பயனர்களிடமிருந்து ரூ.633 கோடியும், பேங்க் ஆப் பரோடா பயனர்களிடமிருந்து ரூ.386 கோடியும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துள்ளன.  மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.8,500 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ப,

“மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன. தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, ‘மினிமம் பேலன்ஸ் இல்லை’ எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது.

மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் திறக்கப்பட்ட கதவுதான் இந்த அபராத நடைமுறை. இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள் என புரிந்துகொள்ளுங்கள். சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும்”

என்று பதிவிட்டுள்ளார்.