காங்கிரஸ் கட்சிக்கு வண்டி வண்டியாக பணம் கொடுக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கும் விதமாக நேற்று நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவுக்கு பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினர்.

இந்தியாவின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், அணில் கபூர், அனுபம் கெர், ரவீனா டாண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகன் அனந்த் அம்பானியுடன் கலந்து கொண்டார், தவிர கெளதம் அதானியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

முன்னதாக, அம்பானியும், அதானியும் காங்கிரஸ் கட்சிக்கு லாரிகளில் பணத்தை அனுப்பிவைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனா, பாகிஸ்தான் தவிர மற்ற அண்டைநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சத்தீவு குறித்தும் இலங்கை குறித்தும் விமர்சிக்கப்பட்ட நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்கரம்சிங்கே, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது இருநாடுகளும் இடையே நிலவி வரும் மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு ஆகிய பிரச்சனைகளைத் தீர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது.