யநாடு

பிரியங்கா காந்தி இன்று வயநாடுக்கு சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியி உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற, வேட்பாளர் அதில் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணைத்தின் விதி ஆகும்.

எனவே ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதி காலியானதால் தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது. வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடக்கிறது.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.  தேர்தல் பிரசாரத்துக்காக இன்று பிரியங்கா காந்தி வயாநாடு செல்கிறார்.

காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் குமார் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம்.,

“வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று முதல் 2 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இன்று சுல்தான்பத்தேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனங்காடி, மானந்தவாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனமரம், கல்பெட்டா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வைத்திரி அருகே பொழுதனா, நாளை திருவம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏங்கப்புழா, எரநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேரட்டுங்கல், வாண்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பாடு, நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலம்பூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.

தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் அவர், மீண்டும் ஒரு முறை பிரசாரம் செய்ய வருவார்”

என்று தெரிவித்துள்ளார்.