யநாடு

யநாடு மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்தும் செய்வதாக பிரியங்கா காந்தி உறுதி அளித்துள்ளார்.

அண்,மையில் நடந்தத மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி  கேரளா மாநிலம் வயநாடு மற்றும் அவரது தாய் சோனியா காந்தி எம்.பி.,யாக இருந்த உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்  வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் தற்போது ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி.யாக இருக்கிறார்.

வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுதேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி கடந்த 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.   தனது தேர்தல் பிரசாரத்தில் ஒரு பகுதியக  வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

பிரியங்கா காந்தி அந்த கடிதத்தில்,

:வயநாடு மக்களுடனான பிணைப்பை ஆழப்படுத்த எனது பணி உதவும் அவர்களுக்காக போராடவும், அவர்கள் விரும்பும் வழியில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள்.

மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது. ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மையமாக இருக்கும்.

உங்கள் ஆதரவுடன் எதிர்காலத்திற்காக இந்தப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் எதிர்நோக்குகிறேன், நீங்கள் என்னை எம்.பி.யாக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன்”

என்று தெரிவித்துள்ளார்.