பாட்னா

தாம் பீக்கார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்ஹ்டு செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிரபல அரசியல் வியூக நிபுணரானபிரசாந்த் கிஷோர், தனது ‘ ஜன் சுராஜ்’ அமைப்பை புதிய கட்சியாக தொடங்க திட்டமிட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் வரும் 2 ஆம் தேதி தனது கட்சியை முறைப்படி தொடங்குகிறார்.

அடுத்த ஆண்டு பீகாரில்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோர் ஆயத்தமாகி வருகிறார். இன்று, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரசாந்த் கிஷோர் \ பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது பிரசாந்த் கிஷோர்

“ மாநிலத்தில் தற்போது உள்ள மதுவிலக்கு கட்டுப்பாடுகள் பயனற்றது. அது சட்ட விரோதமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய வழிவகுத்தது. மாநிலம் ரூ. 20,000 கோடி கலால் வருவாயை இழந்து இருக்கிறது. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன்”

என்று தெரிவித்துள்ளார்.