புதுச்சேரி: புதுச்சேரியில் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந் நிலையில், கொரோனா பரவல் காரணமாக வரும் 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ருத்ரா கவுட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக வரும் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10, 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel