டெல்லி:  18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 4வது கட்ட தேர்தல் நாளை மறுதினம் (ஏப்ரல் 13ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவு நடைபெற இருக்கும், 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில்  இன்று மாலை யுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், நட்சத்திர தொகுதிகளில் கடைசி நேரம் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

18வது நாடாளுமன்றம் அமைப்பதற்காக  மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.  இதையடுத்து, நான்காம் கட்டவாக்குப்பதிவு  நாளை மறுநாள் (மே.13)நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.

4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவானது,  9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில்  நடைபெற உள்ளது.  ஆந்திராவில் 25 தொகுதி கள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த தேர்தல்லில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் களம் காண்கிறார். மற்றொரு மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகிறார். அசாதுதீன் ஓவைசி மற்றும் மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர். நடிகர் சத்ருகன் சின்ஹா  மேற்குவங்கத்தில் களம் காண்கிறார்.

நாளை மறுதினம் வாக்குப்பதிவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட  தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக, காங்கிரஸ் அகிய தேசிய கட்சிகளோடு, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகளுக்கும் முனைப்புடன் வாக்கு சேகரித்து வருகின்றன. கொளுத்தும் கோடை வெயிலை காட்டிலும் அனல் அறக்கும் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  , நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.