டெல்லி

டந்து முடிந்த அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலி நோட்டாவ்க்கு கிடைட்த வாக்கு சதவிகிதம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் அக்.5ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. அதேவேளையில் ஹரியானாவில் பாஜக முன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உள்ள்ற்ஊ.

ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டமாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகளில் 1.48 சதவீதம் பேர் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர். ஹரியானாவிலும் 0.38 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.