டெல்லி: நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கான பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் தொற்று அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்த சோதனைகளின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையும்  அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 7,40,794 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர், இதன் மூலம் நாட்டில் ஒட்டு மொத்தமாக நடைபெற்ற கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,06,72,589 ஆக அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.