பாட்னா: பீகாரின் முதலமைச்சராக ஜேடியு தலைவரான நிதீஷ் குமார் 10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டபபேரவையில் தேர்தலில் பாஜக ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். அவரது, அமைச்சரவையில் பாஜகவுக்கு முக்கியவத்தும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
அவரது பதவி ஏற்புவிழாவில், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், தே.ஜ. கூ. முதலமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.
பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது. இதையடுத்து முதல்வர் பதவி ஜோடியுக்காக, பாஜகவுக்கா என கேள்வி எழுந்தது. பாஜக தலைமை முதல்-மந்திரியாக நிதீஷ்குமாா் நீடிப்பாா் என்று கூறியது. அதுபோல, மற்ற கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன. ‘
இதைத்தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன. பாட்னாவில் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இதையடுத்து ஒருமித்த சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பீகார் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கவர்னரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் கொடுத்தார். அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து புதிய முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகல்வகள் வெளியாகி உள்ளது. பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும் என்ற நிலையில், நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிதிஷ்குமார் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். இதைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.
\