பாட்னா: பீகாரில் மீண்டும் ஆட்சியை என்டிஏ கூட்டணி கைப்பற்றி உள்ள நிலையில், பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார், அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக கூட்டணி தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதையடுத்து சட்டமன்றகட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ்குமார், மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து அவரை பதவி ஏற்க வருமாறு மாநில கவர்னர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இன்று பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.