நாக்பூர்

த்திய அமைச்சர் நிதின் கட்கரி தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

நேற்று மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்த விழாவில் மத்திய அமைச்சர நிதின் கட்காரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிதின் கட்கர் தனது உரையில்

”முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறேன். யாருடைய பெயரையும் கூற போவதில்லை.  ஒரு நபர் என்னிடம், நீங்கள் பிரதமராக போகிறீர்கள் என்றால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றார்.

ஆனால், நீங்கள் ஏன் எனக்கு ஆதரவு தர வேண்டும் என நான் கேட்டேன். உங்களுடைய ஆதரவை நான் ஏன் பெற வேண்டும். என்னுடைய வாழ்வில் பிரதமராவது என்பது என்னுடைய நோக்கம் இல்லை. என்னுடைய மனஉறுதி மற்றும் என்னுடைய அமைப்புக்கு நான் விசுவாசத்துடன் இருக்கிறேன்.

எந்தவொரு பதவிக்காகவும் நான் சமரசம் செய்து கொள்ள போவதில்லை. ஏனெனில், என்னுடைய மனவுறுதியே எனக்கு முக்கியம் என்று கூறினேன்”

என்று தெரிவித்துள்ளார்.