திருவனந்தபுரம்:
கேரளாவில் ‘நிபா’ வைரஸ் தாக்குதல் காரணமாக கோழிக்கோடு மாவட்ட பள்ளி, கல்லூரிகளின் திறப்பு 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இந்த வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது.
இந்நிலையில் மாநில சுகாதார துறை அமைச்சர், கே.கே.சைலஜா, கூடுதல் தலைமை செயலர் ராஜிவ் சதாநந்தன் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில் கோழிக்கோடு மாவட்ட பள்ளி, கல்லூரிகளை 12ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டது. மாநில பணியாளர் தேர்வாணைய நேர்முக தேர்வு உட்பட பிற தேர்வுகளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel