மும்பை: எலன்மஸ்க் நிறுவனத்தின் முதல் டெஸ்லா ஷோரூம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று திறக்கப் பட்டுள்ளது. முதல்வர் பட்னாவிஸ் முதல் ஷோரூமை திறந்து வைத்தார்.
தனது முதல் கார் ஷோரூமை மும்பையில் திறந்திருப்பதன் மூலம் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதித்திருக்கிறது. மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ‘டெஸ்லா அனுபவ மையத்தை’ மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று திறந்து வைத்தார்.

சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவா் எலான் மஸ்க், இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனை தொடங்க பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். ஆனால், அவரது வருகை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. எலன் மஸ்க், இந்தியாவுக்கு வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக எலான் மஸ்க், பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் எனவும் எதிா்பாா்க்கப்பட்டது. முன்னதாக, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எலான் மஸ்க் ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவித் திருந்ததாவது, இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன் எனப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அமெரிக்காவில் பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார்.
இதையடுத்து, டெஸ்டா இந்தியாவில் ஷோரூம்களை தொடங்க முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக மும்பையில் தனது முதல் கார் ஷோருமை தொடங்கி உளளது. இதற்காக, கடந்த மாதம் மும்பையின் குர்லா பகுதியில் உள்ள லோதா லாஜிஸ்டிக்ஸ் பூங்காவில் 24,565 சதுர அடி இடத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்த டெஸ்லா நிறுவனம், ஒரே மாதத்தில் அங்கு ஷோரூமை திறந்திருக்கிறது.
முதற்கட்டமாக, தனது ஒய் மாடல் கார்களை இந்திய சந்தையில் இறக்க உள்ளது.
இந்த நிலையில், டெஸ்லா ஷோரூமை திறந்து வைத்த மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உலகளாவிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இங்கு தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனத்தை தொடங்க வேண்டும் எனவும், மும்பையை ஒரு பார்ட்னராக தனது பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பட்னாவிஸ் மேலும் பேசுகையில், “டெஸ்லா நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி மையத்தை இந்தியாவில் காண விரும்பு கிறோம். டெஸ்லா நிறுவனம் இது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன். மும்பை மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் டெஸ்லா தனது முதல் ஷோரூமை இங்கு திறந்திருக்கிறது. இந்தியாவின் நிதி, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு தலைநகரமாக மட்டுமல்லாமல், தொழில்முனைவோர் நகரமாகவும் மும்பை விளங்குகிறது. வருங்காலத்தில் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு முக்கிய சந்தையாக இந்தியா மாறும். டெஸ்லாவை பொருத்தவரை, ஒரு கார் நிறுவனமாக மட்டுமல்லாமல், அதன் வடிவமைப்பு, புதுமை போன்றவற்றால் உலகளவில் விரும்பப்படுகிறது. இந்திய மக்கள் டெஸ்லாவிற்கு கட்டாயம் ஆதரவு அளிப்பார்கள்” என்று பேசினார்.
மேலும் இந்தியாவின் வணிக தலைநகராக மும்பை விளங்குவதோடு மட்டுமல்லாமல், அங்கு உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், மின்சார வாகன உற்பத்தி, இவி சார்ஜிங் மற்றும் உட்கட்டமைப்பில் மும்பை சிறந்து விளங்குவதாகவும் கூறினார்.
எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா ஷோரூமை நிறுவ திட்டமிட்டபோதே, அங்கு உற்பத்தி ஆலையை நிறுவினால் அது அமெரிக்காவிற்கு இழைக்கும் அநீதி என்று கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் எலான் மஸ்க்கிற்கும், டிரம்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் டிரம்புக்கு எதிராக புதிய கட்சியை தொடங்கினார் மஸ்க்.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு வரிச் சலுகை கோரப்பட்டிருந்த நிலையில், மற்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களும் அதே சலுகையை எதிர்பார்க்கும் எனக் கூறி டெஸ்லாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எலன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். , இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது அமெரிக்காவிற்கு பாதகமானது என்று கூறியிருந்தாலும், எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதில் ஆர்வமாக இருக்கிறார். மேலும், எலன் மஸ்க், இந்திய வம்சாவளியினரை தனது நிறுவனங்களில் உயர் பதவிகளில் நியமித்துள்ளார். உதாரணமாக, வைபவ் தனேஜா, எலான் மஸ்கின் கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், எலன் மஸ்க்கின் சில செயல்களுக்கு இந்தியாவில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, அவர் இந்தியாவிற்கு வழங்கிய நிதியை ரத்து செய்ததற்காக சிலர் அவரை விமர்சித்துள்ளனர்.