கொச்சி: வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சட்டவிரோதமாக வாங்கிய 2 வெளிநாட்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று(செப்.23) காலை சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

மத்தியஅரசு,  ஆபரேஷன் நும்கூர் அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியலாக இன்று காலை கேரளாவில் உள்ள பிரபல நடிகர் மம்முட்டி, அவரது மகன்  துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிருத்விராஜ் வீடுகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில்  சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கேரள மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில்,  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களான துல்கர் சல்மான், பிருத்விராஜ்   வீடுகளில்   சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொச்சி எர்ணாகுளம் பகுதியில் உள்ள பணம்பிள்ளை நகரில்  உள்ள துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியது. இதில் அவர்கள் சட்டவிரோதமாக கார் வாங்கியது உறுதியானது.

அதாவது,  பூட்டான் ராணுவத்தில் பயன்படுத்திய கார்களை சட்டவிரோதமாக  வரி ஏய்ப்பு செய்து துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோர் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இ துதொடர்பாக கொச்சியிலுள்ள இருவரது வீட்டிலும் கார் வாங்கியதற்கான ஆவணங்களையும், வரிதொடர்பான விஷயங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.  இதையடுத்து அவர்களிடம் இருந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக, சில மாதங்களுக்கு முன் பூட்டான் ராணுவம் 50க்கும் மேற்பட்ட ராணுவ கார்களை ஏலம் விட்டுள்ளது. இதில், நேபாளம் வழியாக 37 கார்கள் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாம். முக்கியமாக, கேரளத்திற்குள் மட்டும் 20 கார்கள் கொண்டு வந்ததாகவும் அவற்றை நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரும் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டத்தில் இருவரும்தலா ஒரு காரை சட்டவிரோதமாக வாங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,     துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கார் வாங்கியதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.