டெல்லி

டந்த மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) வசூல் ரூ. 1.73 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வழியே ரூ.1.73 லட்சம் கோடி வசூலாகி உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 6.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பரில் மொத்த வசூல் ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்ததை ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டின் செப்டம்பரில் சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி., ஐ.ஜி.எஸ்.டி. மற்றும் செஸ் வரி ஆகிய அனைத்தும் அதிகரித்து இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த 2024-ம் ஆண்டில் ஒட்டு மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 9.5 சதவீதம் அதிகரித்து, ரூ.10.9 லட்சம் கோடியாக உள்ளது.  கடந்த, 2023-ம் ஆண்டில் இது ரூ.9.9 லட்சம் கோடியாக இருந்தது.

இந்த ஆண்டு ஏப்ரலில் அதிக அளவாக ரூ.2.10 லட்சம் கோடி வசூலாகி இருந்தது.  மேலும் இதேபோன்று, 2023-24 நிதியாண்டில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக உள்ள முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.7 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான சராசரி மாத வசூல், ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது முந்தின ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.