பெங்களூரு: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 33 மார்க் எடுத்தாலே ‘பாஸ்..’   என கர்நாடக  மாநில காங்கிரஸ் அரசு  அறிவித்துருள்ளது. தேர்வு முடிகளில் சில மாற்றங்களை  செய்து அறிவித்துள்ளது.

கர்நாடக மாநித்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC /10வது வகுப்பு), பி.யூ.சி (PUC / 12ம் வகுப்பு )  ஆண்டு பொதுத்தேர்வுகளில் இந்த கல்வியாண்டு முதல் 30 முதல் 33 மதிப்பெண்கள் வரை எடுத்தாலே   மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே பாஸ் மார்க் 35ஆக இருக்கும் நிலையில், அதை குறைத்தும், சில மாற்றங்கள் செய்தும் அறிவித்துள்ளது.

மாநில கல்வி வாரியத்தின் நடவடிக்கையை, . சிபிஎஸ்இ மற்றும் பிற போர்டுகளின் தேர்வு தரநிலைகளுக்கு இணையாக கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கர்நாடக மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக வரைவு அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித் துறை, சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. அதில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பதற்கு ஆதரவாக 700-க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்ததாகவும், அதே நேரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று 8 கருத்துகள் மட்டுமே வந்ததாகவும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.  இதையடுத்து தற்போது தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், SSLC-யில் முதல் மொழி பாடங்களுக்கான மொத்த மதிப்பெண்களை தற்போதுள்ள 125-லிருந்து 100 ஆக குறைப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. “முதல் மொழி பாட மதிப்பெண்கள் குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து பொதுமக்களின் கருத்தை அறிய வேண்டியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு போர்டு தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பு இதுகுறித்து தெளிவுபடுத்துவோம்” என்று பங்காரப்பா கூறினார்.

அதன்படி, திருத்தப்பட்ட  தேர்ச்சி முறை மார்ச்/ஏப்ரல் 2026 தேர்வுகளில் இருந்து அமல்படுத்தப்படும் என்று  அறிவித்தது.

அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC)  மொத்த தேர்ச்சி மதிப்பெண் 206 ஆகவும், PUC-க்கு (பிளஸ் 2) 198 ஆகவும் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு மாணவர் மொத்த தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண் (30-க்கு மேல் மற்றும் 33-க்கு கீழ்) பெறவில்லை என்றால், அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

புதிய விதிமுறைகளின்படி, எஸ்எஸ்எல்சி மாணவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வு இரண்டையும் சேர்த்து மொத்தம் குறைந்தபட்சம் 33 சதவீதம் (625க்கு 206 மதிப்பெண்கள்) பெற வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட பாடத்தின் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 30 சதவீதம் பெற வேண்டும்.

 இரண்டாம் ஆண்டு பி.யூ.சி மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தின் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 30 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும்,

ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் (எழுத்து மற்றும் செய்முறை/உள் மதிப்பெண்கள் உட்பட) பெற வேண்டும், அத்துடன் மொத்த மதிப்பெண் 33 சதவீதமாக (600க்கு 198) இருக்க வேண்டும்.

முதல்முறையாக, கர்நாடகா முழுவதும் உள்ள 800 அரசுப் பள்ளிகள் ஒரே நேரத்தில் கர்நாடகா பப்ளிக் பள்ளிகளாக (Karnataka Public Schools) தரம் உயர்த்தப்பட உள்ளன. ப்ரீ-பிரைமரி முதல் செகண்ட் பியுசி வரை உயர்தரக் கல்வியை வழங்குவதன் மூலம் பள்ளி கல்வித் துறையை வலுப்படுத்த இந்த முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியும் சுமார் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.