ஸ்ரீநகர்

ன்று நடந்த மாரத்தன் ஓட்டப் பந்தயத்தில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எவ்வித பயிற்சியும் 11 கிமீ ஓடி உள்ளார்.

இன்று ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் அவர் மாரத்தானில் பங்கேற்றார்.

எவ்வித பயிற்சியும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி வரலாற்று சாதனை படைத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மாரத்தானில் பங்கேற்று ஓடும்போது, அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர்.

உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில்,

“மாரத்தானில் மற்றவர்களுடன் ஓடுவது மிகவும் வேடிக்கையாக இருந்தது. வழியில் நிறைய செல்பிகள், வீடியோக்கள் எடுத்தனர். என்னை சந்திப்பதற்கான சில கோரிக்கைகள், வேலை தொடர்பான சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. சில செய்தியாளர்கள் ஓடிக்கொண்டே பேட்டி எடுக்கவும் முயன்றனர்.

மகிழ்ச்சியாக இருக்கவோ, மன அழுத்தத்தை வெல்லவோ உங்களுக்கு போதைப் பொருட்கள் தேவையில்லை. ஒரு கிலோ மீட்டர் ஓடுவதோ அல்லது மாரத்தானில் பங்கேற்று ஓடுவதோ நல்லது. இயற்கையான மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அடைய இது போதும். முயற்சி செய்யுங்கள், போதைப்பொருள் இல்லாத ஜம்மு காஷ்மீருக்காக ஓடத் தொடங்குவோம்”

என குறிப்பிட்டுள்ளார்.