நெதர்லாந்து
முன்னாள் ரஷ்ய ராணுவ அமைச்சருக்கு சரவதேச நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவர் மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2022 அக்டோபர் மாதம் இந்த போரில் ரஷ்யா உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் இந்த செயல் மனிதத் தன்மையற்றது என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. எனவே ரஷ்யா மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தீ வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கில் முன்னாள் ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு (வயது 69) மற்றும் ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ரஷிய அதிபர் புதின் மீதும் சர்வதேச நீதின்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
[youtube-feed feed=1]