பெங்களூரு: பெங்களூருவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வர அதற்கான சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சையில் இருக்கும் போது அவரது தண்டனை காலமும் நிறைவடைய கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

அதே வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பும் நீங்க, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஓய்வு எடுத்து வருகிறார்.

சசிகலாவுடன் இருந்ததால் கொரோனா தொற்றுக்கு ஆளான அவரது உறவினர் இளவரசியும் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேம்பட, இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 5ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.