சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் துணை தலைவர் சுஷ்மா அந்தரே பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சுஷ்மா அந்தரே ஹெலிகாப்டரில் பயணம் செய்ய இருந்தார்.

அப்போது அவரை அழைத்துச் செல்ல வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போதும் நிலைதடுமாறி தரையில் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அதிலிருந்து எகிறி குதித்து உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் யாருக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்ற போதும் விபத்து குறித்து காவல்துறை மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.