ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே பனிமலை யூனியன் பிரதேசமான லடாக்கில், தனி மாநிலம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின்போது, போராட்டக் காரர்கள் அங்குள்ள  பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்த நிலையில், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இந்த  கலவரம் காரணமாக  4 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்த  வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் நேபாளத்தில் நடைபெற்றது போல ‘Gen Z’ போராட்டம் என கூறப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு பின்னணியில் இருப்பது யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, அங்குபாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். 

2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டமன்றத்துடன் செயல்படும்; லடாக் யூனியன் பிரதேசம், சட்டமன்றம் இல்லாததாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் லடாக் யூனியன் பிரதேசம், மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது.

இதற்கு எதிராக லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; அரசியல் சாசனத்தின் கீழான உரிமைகளை வழங்க வேண்டும்; லடாக் உள்ளூர் பழங்குடிகளின் தனித்துவத்தைப் பாதுகாக்க சுயாட்சி நிர்வாக கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையானது உள்ளூர் பழங்குடி மக்களுக்கான சுயாட்சி கவுன்சில்களை அமைக்க வகை செய்கிறது. இதன்படியே அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரமில் உள்ளூர் சுயாட்சி நிர்வாக கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன. லடாக் பழங்குடிகளுக்கும் இத்தகைய சுயாட்சி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்; இதற்காக தங்களையும் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதற்கு மத்தியஅரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், தற்போது திடீரென  ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; லடாக் பழங்குடிகளுக்கு சுயாட்சி கவுன்சில்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வலருகிறது.   தங்களது போராட்டத்தை  Ladakh Gen Z  போராட்டம் என  போராட்டக் குழுவினர் பிரகடனம் செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பாஜக அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போராட்டத்தை  Leh Apex Body (LAB) இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்புடன் சூழலியல் செயல்பாட்டாளர் Sonam Wangchuk இணைந்துள்ளார். மேலும் Kargil Democratic Alliance (KDA) என்ற அமைப்பும் இந்தப் போராட்டங்களில் இணைந்துள்ளது.

லடாக் மக்களின் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து சூழல் செயல்பாட்டாளர் Sonam Wangchuk தலைமையில் ஏராளமானோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை செப்டம்பர் 10-ந் தேதி தொடங்கினர். மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. 2-வது கட்டமாக அக்டோபர் 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதற்கிடையில்,  Sonam Wangchuk கடந்த 15 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது லடாக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் லடாக் இளைஞர்கள் அழைப்பு விடுத்தனர்.

அதேநேரத்தில் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் லடாக் இளைஞர்கள் கொந்தளித்தனர்.‘ இந்த சூழலில் புதன்கிழமையன்று செப்டம்பர் 24-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் லடாக் NDS Memorial Ground -ல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர். அப்போது பாஜக அலுவலகம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக அலுவலகம் தீ வைத்தும் எரிக்கப்பட்டது.

இதனால் போலீசாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். ஆனாலும் இளைஞர்களின் போராட்ட உக்கிரம் குறையவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்; கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடக்க முயற்சித்தனர்; இந்த மோதல்களில் 4 பேர் பலியாகினர்; 60 பேர் படுகாயமடைந்தனர்.

லடாக் போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு காஷ்மீரைப் போலவே லடாக்கும் மத்திய அரசால் “துரோகம்” செய்யப்பட்டதாக உணர்வதாகக் கூறினார். முன்னாள் ஜே&கே முதல்வர் மெஹபூபா முப்தி, மத்திய அரசு “நெருக்கடி மேலாண்மைக்கு” அப்பால் நகர வேண்டும் என்றும், லே-யில் வன்முறை போராட்டங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும் கூறினார்.

வன்முறையை நியாயப்படுத்தாத வாங்க்சுக், போராட்டத்தில் “அமைதி மற்றும் போராட்டம்” தேவை என்றும், தொடர்ந்தால் நிலைமை மோசமடைந்து நாட்டின் எல்லைகளில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தினால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வன்முறையாளர்களை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர். இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லடாக்கின் லேவில் வன்முறை வெடித்ததில் . பலர் இறந்திருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, அதே நேரத்தில் குறைந்தது 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனது 15 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், ஆத்திரமூட்டும் உரைகள் மூலம் வன்முறையைத் தூண்டியதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.

இதனால்,. போராட்டக்காரர்கள் காவல்துறையினரைத் தாக்கி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினர் என்றும், இதில்  சுமார் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. காலை 11:30 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.