அந்தமான்: அந்தமான் நிகோபரில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

அந்தமான் நிகோபரில் திங்கள்கிழமை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
திங்கள்கிழமை பிற்பகல் 3.08 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் அந்தமான் நிகோபர் தீவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel