டெல்லி

டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான விவரங்களை வழங்குமாறு, குறிப்பாக அவருடன் படித்தவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.  விவரம் அளிக்க்ச் டெல்லி பல்கலைக்கழகம் மறுத்த நிலையில், அந்த விவரங்களை வழங்குமாறு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.

நேற்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பொதுமக்களின் நலனையும், பொது நலனையும் ஒன்றாக கருத முடியாது எனவும். பொதுமக்கள் ஏதாவது ஒன்றில் ஆர்வம் காட்டினால் அது பொது நலனாக இல்லாமல் இருக்கலாம்எனவும் இந்த விஷயத்தில் ஏதேனும் பொது நலன் உள்ளதா? என்றால், இல்லை என்பதே பதில்’ என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரதமரின் கல்வி குறித்த தகவல்களை ஒரு நம்பிக்கைக்குரிய முறையில் பல்கலைக்கழகம் வைத்திருந்தது எனக்கூறிய அவர், பொது நலன் இல்லாத நிலையில் வெறும் ஆர்வத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யாருக்கும் தனிப்பட்ட தகவல்களைத்தேட உரிமை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.