2024 அக்டோபர் 1 முதல் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அமைச்சரவையின் இந்த தீர்மானம் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 35 நாடுகள் பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், நேபாளம், இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

மேலும், மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ​​ஈரான், ஸ்வீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.