ர்மசாலா

லாய் லாமா தனது வாரிசு குறித்த அறிவிப்பு வெளியிட்டதை சீனா நிராகரித்துள்ளது/

கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அண்டை நாடான திபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, தற்போதைய தலாய் லாமா, சிறுவயதாக இருந்த போதே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார்.   மேலும் அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள், இந்தியாவில் வசிப்பதுடன் திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை.

புத்தமத தலைவராக உள்ள 14-வது தலாய்லாமா இந்த மாதம் வாரிசை அறிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  தலாய் லாமா வருகிற 6-ந்தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,

அந்த வீட்யோவில் தனது வாரிசை அதாவது தலாய் லாமாவின் மறுபிறவியை தனது ‘காடன் போட்ராங்’ அறக்கட்டளைதான் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் எனவும், தனக்குப்பின்னும் தனது அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும் என்று கூறியுள்ளார்.  மேலும் இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அந்த பதிவில் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

தலாய் லாமாவின் இந்த அறிவிப்பை சீனா நிராகரித்து உள்ளது.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இது குறித்து,

‘தலாய் லாமாவின் மறுபிறவியை அங்கீகரிப்பதில், மத மரபுகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, உள்நாட்டு அங்கீகாரம், ‘தங்க கலசம்’ செயல்முறை மற்றும் மத்திய அரசின் (சீனா) ஒப்புதல் ஆகியவற்றின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்’

என தெரிவித்துள்ளார்.