டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட்  நிறுவி உள்ளார். இதன்மூலம் காலனித்துவ பாரம்பரியத்துக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. புதிய சிலை கையில் அரசியலமைப்புச் சட்டத்துடன் இந்திய பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை, கண்களைத் திறந்து, இடது கையில் அரசியலமைப்புச் சட்டத்தால் மாற்றப்பட்ட வாள், முயற்சியாகக் கருதப்படுகிறது காலனித்துவ பாரம்பரியத்தை விட்டு விடுங்கள், வது மாற்றுவதன் மூலம் செய்யப்பட்டது.

இந்திய நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதை சிலையானது கடந்த  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது.  அந்த சிலையின்  கண்கள் கட்டப்பட்டிருக்கும், கையில் வாள் இருக்கும். இது காலனித்ததுவ பாரம்பரியத்தின் நினைவு சின்னமாக கருதப்பட்டது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எந்த ஒரு பாகுபாடுமின்றி நீதி வழங்கவேண்டும் எனவும் சரியான எடையில் தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் அநீதியை அழிப்பதற்காகவே அந்த வாள்’ என்பதாகும்.

ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த நிலையில், காலனித்துவ பாரம்பரியத்துக்கு  முடிவு கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி,  பழைய நீதி தேவதை சிலைக்கு புதிய நீதி தேவதை சிலை அமைக்கப்பட்டு உள்ளது.  தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய சிலையில், வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, நீதி தேவதையின் ,  கையில் அரசியல் சாசன புத்தகம், ஆடை அணிகலன்கள், தலையில் கிரீடம், நெற்றியில் திலகத்துடன் இந்திய பாரம்பரித்துடன்  இருக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்ட சிலை திறக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்து பேசினார். அப்போது,  ‘சட்டத்தின் முன் சமத்துவம்’ என்பதை வலியுறித்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

புதிய சிலை குறித்த கருத்து வெளியாகி உள்ளது. அதன், ‘சட்டம் ஒருபோதும் குருடாகாது என்பதையும், அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதையும் வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது எனவும்,  ‘அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது’ என்பதை குறிக்கும் வகையில் அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது’ என கூறப்படுகிறது.

இருப்பினும், பழைய சிலையின் வலது கையில் இடம்பெற்றிருந்த தராசு, புதிய சிலையிலும் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை திராசு குறிக்கிறது. மேலும், இந்த புதிய சிலையானது, இந்திய பாரம்பரித்தை போற்றும் வகையில்  தலையில் கிரீடம் மற்றும் நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையிலும் வடிவமைப்பட்டுள்ளது.

இந்த புதிய நீதி தேவதை சிலை உச்சநீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது