பெங்களுரு

சித்தராமையாவை கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்க் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  நடத்தி உள்ளனர்.

கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூடா ‘முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த உத்தரவை எதிர்து உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டின் முன்பாக நேற்று முதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

‘மூடா’ நில முறைகேடு விவகாரத்தில் நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில பாஜல்கவினர் சித்தராமையா இல்லத்தின் முன்பு ராஜினாமா செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பியவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனவே சித்தராமையா இல்லத்தின் முன்பு சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.