மே.வங்க முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பா.ஜ.க.வை காற்றடைத்த பலூன் என்று வர்ணித்த மம்தா “ஊடகங்களில் மட்டுமே பா.ஜ.க. உயிர்ப்புடன் உள்ளது” என்று தெரிவித்தார்.

“ஆனால் திரினாமூல் காங்கிரஸ் கட்சியோ மக்களின் இதயத்தில் குடியிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

“கொள்ளை அடித்தவர்கள், தங்கள் பணத்தை பாதுகாத்து கொள்வதற்காக திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர்” என அவர் குற்றம் சாட்டினார்.

“அவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் டிக்கெட் கொடுத்திருக்க மாட்டேன்” என்று குறிப்பிட்ட மம்தா பானர்ஜி “அவர்களுக்கு பதிலாக இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்று கூறினார்.

– பா. பாரதி