பெங்களூரு

ன்று பாலியல் வழக்கில் சிஐடி காவல்துறையினர் முன்பு கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா ஆஜர் ஆனார்.

கடந்த மார்ச் மாதம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். புகாரில் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

எடியூரப்பா மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிறகு இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.  வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

என் எடியூரப்பாவை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா மனு தாக்கல் செய்து கடந்த 14-ந் தேதி அந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.இன்று எடியூரப்பா சி.ஐ.டி. போலீசாா் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி சி.ஐ.டி. போலீசார் முன்பு இன்று ஆஜர் ஆனார். சிஐடி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.