திஸ்பூர்

பாஜகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் அசாமில்  60 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துளார்.

பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்றைய தினம் தனது பா.ஜ.க. உறுப்பினர் அடையாள அட்டையை  பிரதமர் மோடிபுதுப்பித்துக் கொண்டார்.

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலமாக இதுவரை 60 லட்சம் பேர் புதியதால பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா ‘எக்ஸ்’ தளத்தில்,

“பா.ஜ.க. நடத்தி வரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலமாக லட்சுமி பூஜை திருநாளில் 60 லட்சம் பேர் பா.ஜ.க.வில் புதியதாக இணைந்துள்ளனர். இந்த 60 லட்சம் பேர் கொண்ட பலமான குடும்பம், அசாம் மக்களுடன் இணைந்து அயராது உழைக்கும்”

என்று பதிவிட்டுள்ளார்.