ஹாங்சோ

ரும் செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

சீனாவின் ஹான்சோ நக்ரில் வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி அன்று 19ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளது.   இந்த போட்டிகள் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அன்று முடிவடைகிறது.   இந்த போட்டிகள் அனைத்தையும் சோனி தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.

இதில் ஒலிம்பிக் விளையாட்டுகளான நீச்சல், வில்வித்தை, தடகளம், பூப்பந்து, குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, ஹாக்கி, ஜூடோ, கபடி உள்ளிட்ட 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு ஈ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரேக்டான்சிங்கிற்கு இந்த ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதால் இவை பதக்க விளையாட்டுகளாக அறிமுகமாகிறது.

பார்வையாளர்களின் உற்சாகத்தை உயர்த்தும் வகையில் 11 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி டி20 வடிவமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.  முதல் முறையாக இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓசியானியா நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட ஓசியானியா விளையாட்டு வீரர்கள், டிரையத்லான், தடகளம், வுஷூ, ரோலர்ஸ்கேட்டிங், பளு தூக்குதல் ஆகிய 5 விளையாட்டுகளில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியா ஆசிய ஒலிம்பிக் குழுவின் தெற்காசிய மண்டலத்தில் இந்தியா உறுப்பினராக உள்ளது. ஆசிய விளையாட்டுகளின் அனைத்து பதிப்புகளிலும் போட்டியிட்ட 7 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. இதுவரை 1999 ஆம் ஆண்டு போட்டியைத் தவிர மற்ற அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கத்தையாவது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.