டெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

முதல் நாளில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந் நிலையில், இன்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் இதுவரை 4.5 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.