டெல்லி: டெல்லா கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவர்  இன்று மாலை முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியை ஆட்சி செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி அரசு,. 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை (மதுபானக் கொள்கை) வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறத. இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கான முன்னாள் முதல்வரின் மகள் கவிதா கைது செய்யப்பட்டனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக நிலையில், நீதிமன்ற அனுமதியுடன்,  அரவிந்த் கேஜரிவாலை  கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது.

பின்னா், திகாா் சிறையில் அடைக்கப்பட்ட கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.  அவரது காவலை டெல்லி சிறப்பு நீதிமன்றம் மே 20-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில்,  அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து,  கேஜரிவால் மனு தாக்கல் செய்த மனுவைஉயா்நீதிமன்றம்  தள்ளுபடி செய்ததுடன்,   அவரது கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று தெரிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் நிலுவையில் உள்ள சூழலில், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் கோரப்பட்டது.  இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் இருந்து வந்த கேஜரிவாலுக்கு 21 நாள்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க நிபந்ததனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பல்வேறு  நிபந்தனைகளுடன் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா அமர்வு நேற்று (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி, உத்தரவு பிறப்பித்தனா்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மியின் முன்னணி தலைவரான கேஜரிவால் இல்லாமல் அக்கட்சியின் பிரசாரம் களையிழந்து காணப்பட்டது. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைதொடர்ந்து, இன்று மாலை கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்பு அவர் இன்று காலை 11.30 மணியளவில் கனாட்பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் செல்ன்று வழிபாடு நடத்தினார்.  பின்னர் பிற்பகல் 1 மணியளவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு தெற்கு டெல்லியில் நடைபெறும் தேர்தல் பிரசார ஊர்வலங்களில் பங்கேற்று ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார் என ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.