புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வரும் 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக  2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களில் உள்ள தொற்று பாதிப்புகளுக்கு ஏற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

ஒடிசா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அவை திறக்கப்படும் என்றும் மாநில அரசு கூறி உள்ளது.