பாட்னா
பீகார் மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய்க்கு குடியுரிமை சான்று அளிக்கப்பட்டுள்ளது

விரைவில் நடைபெற உள்ளா பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, பாஸ்போர்ட், குடியிருப்பு சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்து உள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவின் சவுரி பகுதியில் ‘டாக் பாபு’ என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. டாக் பாபுவின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்றிதழில் குறிப் பிடப்பட்டு உள்ளது. சான்றிதழில் பீகார் வருவாய் துறை அதிகாரி முராரி சவுகான் கையெழுத்திட்டு உள்ளார்.
மாநில அரசு அலுவலகத்தின் கவுன்ட்டர் மூலமாக நேரடியாக வழங்கப்பட்டுள்ள சான்றிதழில் நாயின் புகைப்படமும் அச்சிடப்பட்டு உள்ளது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருவதால் நாய்க்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழை பீகார் வருவாய் துறை நேற்று ரத்து செய்துள்ளது.