Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை

Jul 11, 2020
சாத்தான்குளம்:
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைமேற்கொண்டுள்ள சிபிஐ, இன்று சாத்தான்குளத்தில் உள்ள உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியது.
சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்தாக கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட தந்தை மகன், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், உயர்நிதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிசிஐடி அதிரடியாக விசாரித்து 10 காவல்துறையினரை கைது செய்து சிறையில் அடைத்தது. தமிழகஅரசும்,  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இதையடுத்து, வழக்கை ஏற்றுக்கொண்ட சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர்.
அவர்களிடம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, ஆவணங்களை,  சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அது தொடர்பாக சிபிஐ காவல்துறையினரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர்.
இதையடுத்து நேரடி விசாரணைக்கு செல்வதாக அறிவித்த நிலையில், இன்று காலை  சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் சென்றனர். அங்கு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார். மேலும் பலரிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Post navigation

வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்…
ஊரடங்கு காலத்தில் உதித்த யோசனை…! போலி வங்கி தொடங்கிய 3 பேர் கைது

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer