டெல்லி: அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி  நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்தை  56 முன்​னாள் நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது.

எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தீர்​மானத்​தில் சுட்​டிக் காட்​டி​யிருக்​கும் காரணங்​கள் திருப்​தி​கர​மாக இல்​லை, அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி செய்​வது ஜனநாயக விரோத நடவடிக்கை. இது, அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரானது என கடுமையாக சாடி உள்ளனர்.

திருப்​பரங்​குன்​றம் விவ​காரம் தொடர்​பாக திமுக, காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த எம்​பிக்​கள் கடந்த 9-ம் தேதி மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லாவை சந்​தித்​தனர். அப்​போது சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என்று இயற்​றப்​பட்ட தீர்​மான நோட்​டீஸை அவரிடம் வழங்​கினர். இந்த நோட்​டீஸில் 120 எம்​பிக்​கள் கையெழுத்​திட்டு உள்​ளனர்.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தின் 2 முன்​னாள் நீதிப​தி​கள், உயர் நீதி​மன்​றத்​தின் 5 முன்​னாள் தலைமை நீதிப​தி​கள் உட்பட 56 நீதிப​தி​கள் நேற்று கண்டன அறிக்​கையை வெளி​யிட்​டனர். அதில் கூறி​யிருப்​ப​தாவது, கொள்​கை, அரசி​யல் சார்பு இன்றி நீதிப​தி​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இந்த சூழலில் உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்​யக் கோரி மக்​களவை​யில் தீர்​மானம் வழங்​கப்​பட்​டிருப்​பதை மிக வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம்.

இது நீதிப​தி​களை அச்​சுறுத்​தும் முயற்சி ஆகும்.எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தீர்​மானத்​தில் சுட்​டிக் காட்​டி​யிருக்​கும் காரணங்​கள் திருப்​தி​கர​மாக இல்​லை. அவசர நிலை காலத்​தில் நீதிப​தி​கள் தண்​டிக்​கப்​பட்​டனர்.

உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிப​தி​கள் தீபக் மிஸ்​ரா, ரஞ்​சன் கோகோய், எஸ்​.ஏ.​பாப்​டே, சந்​திரசூட் ஆகியோர் தங்​களது பதவிக் காலத்​தில் பல்​வேறு விமர்​சனங்​களை எதிர்​கொண்​டனர். தற்​போதைய உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதும் விமர்​சனங்​கள் முன்​வைக்​கப்​படு​கின்​றன.

இவை இந்​திய நீதித் துறை, இந்​திய ஜனநாயகத்​தின் மீதான தாக்​குதல் ஆகும். அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி செய்​வது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். இது, அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரானது ஆகும். தற்​போதைய நிலை​யில் ஒரு நீதிபதி (ஜி.ஆர்​.​சுவாமி​நாதன்) மீது தாக்​குதல் தொடுக்​கப்​பட்டு உள்​ளது. நாளை ஒட்​டுமொத்த நீதித்​துறை மீதும் தாக்​குதல் தொடுக்​கப்​படலாம்.

இந்த நேரத்​தில் நாடாளு​மன்ற எம்​பிக்​கள், பார் கவுன்​சில்​களின் உறுப்​பினர்​கள், அரசு அலு​வலர்​கள், பொது​மக்​கள் ஓரணி​யாக திரண்டு நீதித் துறையை காக்க வேண்​டும். இது​போன்ற பிரச்​சினை​களை முளை​யிலேயே கிள்ளி எறிய வேண்​டும். ஒரு தீர்ப்பை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​ய​லாம். அதை விடுத்து அரசி​யல்​ரீ​தி​யாக நீதிப​தி​களை அச்​சுறுத்​தும் வகை​யில் செயல்​படு​வதை ஏற்க முடி​யாது.

இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

இந்த கண்டன அறிக்கையில்,  உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​கள் ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்​தா, ராஜஸ்​தான் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி அனில் தியோ சிங், பாட்னா உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்​டி, கர்​நாடக உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி கமல் முகர்​ஜி, சிக்​கிம் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி பெர்​மோத் கோலி, சென்னை உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​கள் சுப்​பிரமணி​யன்​, சிவ​ஞானம், சுதந்​திரம்​ உட்​பட 56 நீதிப​தி​கள்​  கையெழுத்​திட்​டு உள்​ளனர்​.

120 எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவை சபாநாயகரிடம் நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்கம் கோரி திமுக கூட்டணி தீர்மானம் வழங்கல்…

[youtube-feed feed=1]