டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் தனது தலையீட்டின் பேரிலேயே இந்தியா பாகிஸ்தான்மீதான தாக்குதலை நிறுத்தியது அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் கரியை பூசிய பாகிஸ்தான்… உள்ளது பாகிஸ்தான். டிரம்பின் அண்டபுழுகு அம்பலமாகி உள்ளது.

ஆபரேஷன் சிந்​தூரின்போது இரு நாடு​களுக்கு இடையி​லான பிரச்​சினை​களை தீர்க்க மூன்​றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்​தியா ஏற்​க​வில்லை என்று பாகிஸ்​தான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இதை பாகிஸ்தான் துணைபிரதமர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து பஹல்காம் பகுதியில் இந்தியர்களை கொடூரமாக சுட்டுக்கொன்ற செயலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததுடன் பாகிஸ்தான் விமான நிலையம் உள்பட சில பகுதிகளை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இந்திய ராணுவ அதிகாரிகளிடம் பேசியதின் பேரில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து, தனது தலையீட்டால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என கூறி வந்தார். பல முறை அவர் இந்த கருத்தையே கூறி வந்த நிலையில், இதற்கு இந்தியஅரசு மறுப்பு தெரிவித்தது.  பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் மூன்றாம் நபர் தலையீட்டை ஏற்காது என உறுதிப்படுத்த தெரிவித்து வருகிறது.

மேலும்,  நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடியும், இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் எந்த நாட்டு தலைவரும் தலையிடவில்லை. மே 9-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் மைக் வின்ஸ் தொலைபேசியில் பேசினார்.  அப்போது, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தேன் என்றார்.

இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மூன்றாம் நபர் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், டிரம்ப் கூறியதை வைத்து அரசியல் செய்து வருகின்றன.

இந்த நிலையில்,   ஆபரேஷன் சிந்​தூரின்போது இரு நாடு​களுக்கு இடையி​லான பிரச்​சினை​களை தீர்க்க மூன்​றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்​தியா ஏற்​க​வில்லை என்று பாகிஸ்​தான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.  இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரித்துவிட்டது என பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் கூறியுள்ளார்.

மேலும்,  டெல்லி உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் இஸ்லாமாபாத் நட்புறவை நாடுவதாகவும் அவர் கூறினார்.

தோஹா​வில் அல் ஜசீரா ஊடகம் பாகிஸ்​தானின்  துணை பிரதமரும் வெளி​யுறவு அமைச்​சரு​மான முகமது இஷாக் தாரிடம்  நடத்திய இண்டர்வியூவின்போது,  இந்​தி​யா​வுடன் பேச்​சு​வார்தை நடத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் மற்​றும் மூன்​றாம் தரப்பு மத்​தி​யஸ்​தத்​தில் பாகிஸ்​தானின் நிலைப்​பாடு குறித்து  கேள்வி எழுப்பியது.

இதற்கு அவர் அளித்த பதிலில், , “இதில் எங்​களுக்கு எந்த ஆட்​சேபனை​யும் இல்​லை. ஆனால், இந்​தியா இது இருதரப்பு விஷ​யம் என்று கூறி திட்​ட​வட்​ட​மாக மறுத்து வரு​கிறது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்க வெளி​யுறவு துறை செய​லா​ளர் மார்​கோ ரூபியோவுட​னான சந்​திப்​பின்​போது கூட இந்​தி​யா​வுட​னான பேச்​சு​வார்த்தை பிரச்​சினையை எழுப்​பினேன். ஆனால், ரூபியோ, இது இருதரப்பு பிரச்​சினை என்​பதே இந்​தி​யா​வின் நிலைப்​பாடு என்று தெரி​வித்​து​விட்​டார்.

இருதரப்பு பிரச்​சினை​களைத் தீர்ப்​ப​தில் எந்​தவொரு மத்​தி​யஸ்​தத்​தை​யும் இந்​தியா திட்​ட​வட்​ட​மாக நிராகரித்​து​விட்​டது. அதனை ஏற்​க​வில்​லை.

இவ்​வாறு இஷார் தார் தெரி​வித்​தார்.

 இதுகுறித்து மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜூ ந வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில், “ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்​கை​யின்​போது இந்​தியா மூன்​றாம் தரப்​பின் பங்கை நிராகரித்​து​விட்​ட​தாக பாகிஸ்​தான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. போர் நிறுத்த நடவடிக்​கை​யில் மூன்​றாம் தரப்பு தலை​யீடு இருந்​த​தாக இந்​தி​யா​வின் பிம்​பத்தை குறைத்து மதிப்​பிட்டு பிரச்​சா​ரம் நடத்திய​வர்​கள் இப்​போது மன்​னிப்​பு கேட்​பார்​களா?” என்​று கேள்​வி எழுப்​பி உள்​ளார்​.